2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் 190 மில்லியன் ரூபா வருமானம்

Freelancer   / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 190 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை  தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19 ஆயிரத்து 425 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சுமார் 520,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரே நாளில் மாத்திரம் அதிகபட்ச வருமானமாக 5.9 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பதிவாகியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .