2025 மே 15, வியாழக்கிழமை

கல்முனையில் மின் துண்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

காலை 08.30 முதல் மாலை 05 மணி வரை இந்த மின் துண்டிப்பு இடம்பெறுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (17) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மீலாத்நகர், அட்டாளைச்சேனையிலும் நாளை மறுதினம் (18) நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அஷ்ரப் நகர் பகுதிகளிலும் 21ஆம் திகதி, மல்கம்பிட்டி வீதியிலும் மின் தடைப்படும்.

22ஆம் திகதி, மீலாத்நகர், அட்டாளைச்சேனையிலும் 24ஆம் திகதி சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனையிலும் 29ஆம் திகதி, சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனையிலும் மின் தடைப்படும்.

மேலும், 30ஆம் திகதின்று, மருதமுனை, துறைவந்தியமேடு, பெரியநீலாவனை ஆகிய பகுதிகளில் காலை 08.45 முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .