Janu / 2023 ஜூன் 20 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித மேம்பாட்டு அமைப்பின் தன்னார்வலருக்கான உத்தியோபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ். ஏ. முகம்மட் அஸ்லம் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும் அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ஐ.எல்.எம். இர்பான், அமைப்பின் பிரதித் தலைவர் எம். ஐ.சம்சுதீன் உட்பட உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், அமைப்பின் கீழ் இயங்கும் பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இவ்வமைப்புடன் இனைந்து செயற்பட்டு வருகின்ற தன்னார்வலர்கள் பலருக்கு உத்தியோகபூர்வ பொறுப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஏ.எம்.அஸ்லம்



5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago