Editorial / 2018 மே 24 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று (24) மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்தும் குறித்த மாணவர்களின் தடையை உடனடியாக நீக்குமாறும், அவர்களை மீள அனுமதிக்கமாறும் பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் நடவடிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டம், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடைபவணியாக பதாதைகளை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டது.

1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago