2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

6 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

Mithuna   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

அவ்வகையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இந்திய தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (27) சென்னை வந்து சேர்ந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .