2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

900 ஆண்டுகள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Freelancer   / 2024 மார்ச் 11 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்துஇ 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் அது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது.

கொங்கு வீரபாண்டியன் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து தலைவருக்கு, வாணாபுரம் (பாணாபுரம்) நகரை, தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது. S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X