Freelancer / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தானில், திங்கட்கிழமை (23), 3 வயது சிறுமி ஒருவர், ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு அருகே சுமார் 150 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும், அந்த ஆழ்துளை கிணறு மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில், அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026