2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சந்திரயான்-3 வெற்றியை பாராட்டிய பாக். தொகுப்பாளர்கள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, கடந்த 23-ந் திகதி நிலவின் தென்துருவத்தில் இறங்கி வரலாறு படைத்தது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுமா அமீர் ஷா மற்றும் அப்துல்லா சுல்தான் ஆகிய  தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இருவரும், சந்திரயான்-3 வெற்றியை வெகுவாக பாராட்டி உள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

இதுகுறித்து பேசிய அவர்கள், " இந்தியா நிலாவிற்கு சென்று சாதித்துள்ள அதேவேளையில் நாம் இங்கு மாட்டிக் கொண்டுள்ளோம். நாம் நமக்குள்ளேயே பரபரப்பாக சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். இங்கிருந்து சந்திரயான்-3 வெற்றியைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X