2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சாந்தனுக்கு அனுமதி

Mithuna   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் சாந்தன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சட்டதரணி, “திருச்சி சிறப்பு முகாமில் உள்ள சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இந்த ஆவணங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. தற்போது உயர் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறேன். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வருகிற 29 ஆம்  திகதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X