2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சிறுமி கொலை: வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை

Freelancer   / 2024 நவம்பர் 12 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுகங்குட்படுத்தி, கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து, கேரள மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் - பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குறித்த  சிறுமி  2021ஆம் ஆண்டு, உடலில் 67 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

 இது குறித்து சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அவரது இரண்டாவது கணவரான தமிழகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது 26) என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு பத்தனம்திட்டா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம், குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். 

 அதன்படி, திங்கட்கிழமை (11),  அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன்,  குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .