2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவு

Freelancer   / 2024 மார்ச் 16 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18ஆவது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதற்கான திகதி அட்டவணை இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X