Freelancer / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல தேநீர் நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர் 49 வயதான பரக் தேசாய். சம்பவத்தன்று இவர் தன் வீட்டின் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்களின் கூட்டம் அவரை துரத்த ஆரம்பிக்கவே அவற்றிடம் இருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பரக் தேசாய்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு 7 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (24) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
15 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Apr 2026