2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தோல்வியையே இலக்காகக் கொண்ட வேட்பாளர்!

Freelancer   / 2024 மார்ச் 21 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வியையே இலக்காகக் கொண்டு 239ஆவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார் தேர்தல் மன்னன் பத்மராஜன் என்பவர்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தருமபுரி தொகுதியில் முதல் நபராக மேட்டூரைச் சேர்ந்த இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுதும் எங்கு தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், இதுவரை ஒன்றில் கூட வெற்றி பெற்றது இல்லை. நாளைடைவில் இதுவே ஒரு சாதனையாக மாறியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு ‘லிம்கா புக் ஒஃப் ரெக்கார்ட்;’ போன்ற சாதனைப் புத்தகங்களில் மூன்று முறை இடம் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை 239 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இம்முறையும் தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். உலக சாதனை படைக்கும் நோக்கத்தில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை போட்டியிட்டவற்றில் ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 6000 வாக்குகளைப் பெற்றுள்ளேன். ஒரே ஒரு வார்ட் தேர்தலில், ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

இதுவரை வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பலரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். துணை ஜனாதிபதிக்கு மூன்று முறை போட்டியிட்டுள்ளேன்.

1988 முதல் இதுவரை ஒரு கோடி ரூபா வரை தேர்தல் வேட்பு மனுவிற்காக செலவழித்துள்ளேன். ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன்” என்று அதையும் ஒரு கர்வத்துடன் தெரிவித்துள்ளார். S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X