2024 மே 04, சனிக்கிழமை

“நாயின் மீது பாஜகவுக்கு பிரியம்”

Mithuna   / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை கடந்த ஜனவரி 14-ம் திகதி ராகுல் காந்தி துவங்கினார். தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.  

ராகுல் காந்தி  நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். அப்போது அந்த நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பிஸ்கட்டை அருகில் இருந்த நபரிடம் கொடுக்கிறார். பிறகு அந்த நாய், அந்த நபர் கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்டது.

 இதுதொடர்பாக அமித் மாளவியா, “சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும்” தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட பதிவில்கூறும்போது, “ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தாலும், காங்கிரஸில் நான் இருந்தபோது அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து விலகினேன்.” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாஜகவினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், “அந்தப் செல்லப் பிராணி நடுங்கி கொண்டிருந்தது. நான் பிஸ்கட் கொடுத்தபோது அது பயந்திருக்க வேண்டும். எனவே, நாயின் உரிமையாளரிடம் பிஸ்கட் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். அதன் பிறகு நாய் பிஸ்கட்டைச் சாப்பிட்டது. இதில் என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. பாஜகவுக்கு நாய்கள் மீது அப்படி என்ன பிரியம் எனத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .