2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புதிய அப்டேட்டை அறிவித்த இஸ்ரோ

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வுசெய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி சனிக்கிழமை (02) முதல் செயல்படத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும்,ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் 2 நாட்களில் SWIS ஆல் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது எனவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .