2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மகா கும்பமேளா புனித நீர் ஜெர்மனிக்கு அனுப்பி வைப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தின் புனித நீருக்கான தேவை வெளிநாட்டில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், 1,000 போத்தல்கள் ஜெர்மனியில் உள்ள பக்தர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உபி. அரசு மேலும் கூறியுள்ளதாவது: 

“இந்த தெய்வீக நிகழ்வின் ஆன்மிக சாரத்தை, திருவிழா மைதானத்திற்கு அப்பாலும் நீட்டிக்கும் வகையில், தீயணைப்பு துறை மூலம் உ.பி.யின் 75 மாவட்டங்களுக்கும் திரிவேணியின் புனித நீர் விநியோகிக்கப்பட்டது.

“இப்போது, இந்த புனித நீர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறது. முதல் முறையாக, ஜெர்மனியில் உள்ள பக்தர்களுக்கு 1,000 போத்தல்வளில் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“மகா கும்பமேளா முடிந்த பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு புனித நீரை மகா பிரசாதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .