Freelancer / 2023 நவம்பர் 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனம், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழிவகைகளை செய்தளித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்பட்டபோது பசையுடன் கண்ணாடித் துகள் தடவப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தியதால் மக்கள் பலரும், பறவைகளும் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் மக்களும், மிருகங்கள், பறவைகள் இறக்க நேரிட்டன

அவை மக்கிப்போகாமல் நிலம், ஆறு, குளம் போன்ற இடங்களில் ஆங்காங்கு கிடப்பதால், அதில் சிக்கிக்கொள்ளும் உயிரினங்கள் மூச்சு திணறியும், அதை உண்பதால் பலவித சிரமங்களுக்கு ஆளாகியும் இறந்துவிடுகின்றன.
எனவே, மாஞ்சா நூல் உட்பட மக்கிப்போகாத தன்மையுள்ள, பட்டம் பறக்க பயன்படுத்தப்படும் நைலான் நூல், பிளாஸ்டிக் நூல், செயற்கை இழையால் செய்யப்பட்ட நூல்கள் ஆகியவற்றை தயாரிப்பது, விற்பது, சேமித்து வைப்பது, கொள்முதல் செய்வது, இறக்குமதி செய்வது என அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது
14 minute ago
24 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
46 minute ago
59 minute ago