2024 மே 04, சனிக்கிழமை

’மன் கி பாத்’ நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு கிடையாது

Mithuna   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதின் குரல் என்ற தலைப்பில் மாதம்தோறும் வானொலியில் பிரதமர் மோடி பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி தேர்தல் காலத்தை முன்னிட்டு மூன்று மாதங்களுக்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ( மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். அதன்படி இந்த பெப்ரவரி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 25ஆம் திகதி  தனது 110 வது மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது அவர், “தேர்தலை முன்னிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதில் குரல் நிகழ்ச்சி நடைபெறாது . மீண்டும் பாஜக ஆட்சி வந்த உடன் 111வது நிகழ்ச்சியாக மனதின்  குரல் மீண்டும் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .