Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவன்-மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இந்திய சட்டம் அனுமதிக்கிறது.
தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் விதிமுறைகள், 2022-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், அவற்றில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை சனிக்கிழமை (24) அறிவிப்பாணையாக வெளியிட்டது.
இதுதொடர்பான அந்த அறிவிப்பாணையில், “வாடகைத்தாய் முறையில் பிறக்கப்போகும் குழந்தை, அதன் தந்தையின் உயிரணுவையோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும். அந்த நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
அதாவது, கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது. யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால்தான், அந்த முறையை பயன்படுத்த முடியும்.
இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும். அதன்பிறகுதான் உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெற முடியும்.
ஒரு பெண், விதவையாகவோ அல்லது விவாகரத்து ஆனவராகவோ இருந்தால், அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெறப்பட்ட உயிரணுவையும் பயன்படுத்தித்தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago