Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா அறிவித்துள்ள கப்பல் முற்றுகை நடவடிக்கையில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனப் பிரித்தானியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா - பிரித்தானியா இடையிலான நீண்டகால உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணிநேரமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. "அணுஆயுதங்களை உருவாக்க மாட்டோம்" என்ற உறுதிமொழியை வழங்க ஈரான் மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை முறிந்ததாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கும் முற்றுகைக்கும் பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ஸ்கை நியூஸ்' வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முற்றுகையில் பிரித்தானியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்துப் பிரித்தானிய அரசுத் தொடர்பாளர் கூறுகையில்:
"நாங்கள் சர்வதேசக் கடல் போக்குவரத்துச் சுதந்திரத்தையே விரும்புகிறோம். உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில்கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். பிரான்ஸ் போன்ற இதர நாடுகளுடன் இணைந்து, கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவே நாங்கள் பணியாற்றி வருகிறோம்."
அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த முற்றுகை நடவடிக்கையானது எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், பிரித்தானியா இந்த இராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago