2025 ஜூன் 16, திங்கட்கிழமை

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சினாபாங் நகருக்கு தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பகு குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .