2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரானிலும் மக்கள் போராட்டம்

Freelancer   / 2022 மே 16 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் உணவுப் பொருள் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈரானில் கோதுமையின் விலை பலமடங்காக உயர்ந்ததன் காரணமாக அடிப்படை உணவுகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதேபோல, பால் பொருள்கள், சமையல் எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக அங்கு மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்ட நிலையில், 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .