Janu / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த அக்டோபர் 12 அன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 57.7% ஆகும்.
இந்நிலையில் பால் பயா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அனைத்தின் அரசியலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான இசா ச்ரோமா பகாரி 35.19% வாக்குகளைப் பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், பால் பயா 2032 ஆம் ஆண்டு வரை கேமரூன் அதிபராக தொடர்வார்.
கேமரூனின் முதல் அதிபரின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு பால் பயா முதன்முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
பின்னர், அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கி, தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கேமரூனில் கடந்த வாரம் பதற்றம் நீடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, டூவாலாவா நகரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எதிர்க்கட்சியினர் வாக்குகள் திருடப்பட்டதாக கூறி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வருகின்றனர்.

40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago