2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பளத்தை நாணயங்களாக வழங்கிய முதலாளி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 18 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் தன்னிடம் பணிபுரிந்த  முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்புள்ள நாணயங்களை சம்பளமாக வழங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அண்ட்ரியாஸ் ஃப்ளாட்டன் (Andreas Flaten) என்னும் குறித்த ஊழியர் தான் இறுதியாகச் செய்த வேலைக்கான  சம்பளத்தை தனது முதலாளி கொடுக்கவில்லையெ அமெரிக்க மனிதவள அமைச்சிடம் புகார் அளித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமுற்ற  வாகனப் பழுது பார்க்கும் கடை முதலாளியான மைல்ஸ் வாக்கர் (Miles Walker), எண்ணெய்ப் பிசுபிசுப்புள்ள ஃப்ளாட்டனின் வீட்டு வாசலில் கொட்டிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழியர் சட்டத்தை மீறியதாக, வாக்கர் மீது அமைச்சு வழக்குத் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .