Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 03 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2, 2024 உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2, 2025 நிலவரப்படி, சிந்து நதி நீர் அமைப்பில் (பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள்) கிடைக்கும் நீரின் சதவீதம் 10.3 சதவீதம் குறைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வருவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால், வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிந்து நதி நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA), இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி பஞ்சாப் மாகாணத்தில் 1,28,800 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த நீர் சேமிப்பை விட 14,888 கனஅடி குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் காரீப் பயிர் விதைப்பு பருவம், தென்மேற்கு பருவமழை ஜூலை இறுதி வரை பஞ்சாப் மாகாணத்தை அடைய வாய்ப்பில்லை. மேலும் கடுமையான வெப்ப அலைகள் ஆகியவற்றால் விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இந்த கோடையில் நாட்டின் மொத்த நீர் ஓட்டத்தில் 21 சதவீத பற்றாக்குறையையும், இரண்டு முக்கிய அணைகளில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு பற்றாக்குறையையும் எதிர்கொள்வதாக பாகிஸ்தான் கடந்த மாதம் கூறியது. அணை அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன விநியோக கண்காணிப்பு நிறுவனங்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
11 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago