Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள கைனெருகபா, துருக்கி நாடு உகாண்டாவிற்கு உடனடியாக 1 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தொகையை வழங்கத் தவறினால், உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், துருக்கி தனது நாட்டை "முதுகில் குத்திவிட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், உகாண்டா மக்கள் துருக்கிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்க்க, துருக்கி தனது நாட்டின் "மிக அழகான பெண்ணை" தனக்கு மனைவியாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உகாண்டா படைகளைத் துருக்கியால் ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாது என்றும், தனது படைகள் இயேசு கிறிஸ்து மற்றும் முகமது அலி ஆகியோரால் ஈர்க்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்கள் குறித்துப் பேசிய கைனெருகபா, "புனித நிலங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக" இஸ்ரேலுக்கு ஆதரவாக 1,00,000 உகாண்டா வீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முஹூசி கைனெருகபா, உகாண்டாவின் நீண்டகால அதிபரான யோவேரி முசேவேனியின் மகன் ஆவார். அவர் தற்போது உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும், 'தேசபக்தி லீக்' என்ற அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
கைனெருகபா இத்தகைய சர்ச்சைகளில் ஈடுபடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு 100 மாடுகளைச் சீதனமாக வழங்குவதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் பதிவிட்டிருந்தார். ஒருவேளை தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இத்தாலி மீது படையெடுப்போம் என்றும் அவர் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
52 minute ago