2025 ஜூலை 16, புதன்கிழமை

நியு ஸ்டார் கிங் சம்பியனாக தெரிவு

Super User   / 2014 மே 04 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் வெள்ளிக்கிழமை (02) நடத்திய பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நியு ஸ்டார் கிங் சம்பியன் கிண்ணத்தைப் தனதாக்கிக் கொண்டது.

அணிக்கு ஏழு பேர், ஐந்து பந்துப்பரிமாற்றங்கள்  கொண்ட இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் நியுஸ்டார் கிங் மற்றும் கிங்ஸ் பவர் ஆகிய இரு அணிகளும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியு ஸ்டார் கிங் அணியினர் ஐந்து பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் பவர் அணியினர் குறித்த 5 பந்துப்பரிமாற்றங்களில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர் இதன் மூலம் 03 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியுஸ்டார் கிங் அணி சம்பியனானது.

கழகத்தின் உப தலைவர் ஏ.எம்.அம்சுன் தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாகக கழகத்தின் தலைவரும் அதிபருமான எம்.ஐ.றியாஸ் கலந்து சிறப்பித்ததுடன் கழகத்தின் செயலாளர் ஏ.எஸ்.சபான் மற்றும் மார்க்ஸ் மேன் கழகத்தின் உபதலைவர் ஏ.எல்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .