Janu / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஜனரஞ்சக விளையாட்டு நிகழ்வு மட் / ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் சங்கத்தின் தலைவர் யூ.எல்.சுபைதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.
நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான தேசிக்காய் சமநிலை ஓட்டம், சாயப்பானை உடைத்தல், சாக்கோட்டம், யானைக்கு கண் வைத்தல்,மெதுவான துவிச்சக்கர வண்டி ஓட்டம் ,மோட்டார் சைக்கிள் ஓட்டம், சங்கீத கதிரை,வினோத உடை என பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்தன.
ஏறாவூர் மண்ணில் மூன்றாவது முறையாக இவ் ஜனரஞ்சக விளையாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஜவ்பர்கான்



6 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
32 minute ago