Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கத்தால் நாடு பூராக நடைபெறும் 53ஆவது சேர் ஜோன் ட்ராபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம். ஆகில் மிகா 15 வயது ஆண்களுக்கான 80 மீற்றர் தடைதாண்டலில் முதலாமிடத்தையும், 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 12 வயது ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஏ.எம். லாயிஸ் 3.92 மீற்றர் தூரம் பாய்ந்து அதி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
25 minute ago
28 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
4 hours ago
5 hours ago