Janu / 2023 ஜூன் 21 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
23 கடினபந்து அணிகள் பங்கு கொள்ளும் "தோப்பூர் கிண்ணம்" கடினபந்து கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கோலாகலமாக ஆரம்பமானது.

தோப்பூர் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபையினால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் 06வது தோப்பூர் கிண்ணம் இதுவாகும்.

இப் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் 23 கடினபந்து அணிகளும் தங்களது புதிய மேலங்கிகளை அணிந்து மோட்டார் சைக்கிள்களில்களில் பேரணியாக வந்தனர்.அத்தோடு தோப்பூர் கிண்ணத்தின் அறிமுகமும் ,அணிகளின் அறிமுக நிகழ்வுகளும் இடம்பெற்றன.

38 வருடங்களை கடந்துள்ள தோப்பூர் பிரதேசத்தின் கடினபந்து வரலாற்றில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியோர் ,தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்களாக இருந்தோர், கிரிக்கெட் வளர்ச்சிக்காக உதவியோர் என பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



10 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
50 minute ago