2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

’’குஷ்’’ போதைப் பொருளுடன் வெளிநாட்டு பயணி கைது

Janu   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 1 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியுடைய  "குஷ்" போதைப் பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 36 வயதுடைய இந்திய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் இந்த "குஷ்" போதைப் பொருட்களை தாய்லாந்தின் பாங்காக்கில்   வாங்கி, இந்தியாவின் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து புதன்கிழமை (24) அதிகாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

குறித்த சந்தேக நபரிடமிருந்து 01 கிலோகிராம் 556 கிராம் "குஷ்" போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.  

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

டி.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .