2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நினைவுப் பேருரையும் விருது வழங்கலும்’

Kogilavani   / 2017 மார்ச் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

துரைவி 86ஆவது பிறந்த தினத்தையொட்டி, நினைவுப் பேருரையும் விருது வழங்கல் விழாவும், நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை மேமன்கவி வழங்கவுள்ளார்.

“சமகால அரசியல் குரலாக மலையக இலக்கியம்” என்ற தொனிப்பொருளில், நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்புசந்தி திலகர், உயைாற்றவுள்ளார். நன்றியுரையை ராஜ் பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கவுள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பண்ணாமத்துக்கவிராயர்
எஸ்.எம்.பாரூக் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ‘காரவான் கீதங்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் பாஸ்கரன் சுமன் எழுதிய, ‘திரிதலிருந்து தெரிதல் - பண்பாட்டு உரையாடல்’ எனும் கட்டுரைத் தொகுப்பும், இவ்வாண்டுக்கான துரைவி விருதைப் பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X