Janu / 2023 நவம்பர் 19 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை தினசரி அதிகரித்த நிலையில் காணப்படுவதாக வாகன சாரதிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
கட்டாக்காலி மாடுகளின் தொல்லையால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் சிலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அங்கவீனர்களாகவும் பலர் கஸ்டமான சூழ்நிலையில் வாழ்ந்தும் வருவதாக தெரியவந்துள்ளது.
பிரதேசங்களிலுள்ள உள்ளுராட்சி சபைகளினால் திடீரென சில முடிவுகள் கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பழைய நிலைமைக்கே அது திரும்புகின்றதாக கூறி
இதற்கு நிதந்தரமான தீர்வொன்றை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
அஸ்ஹர் இப்றாஹிம்


11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026