2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இறந்த நிலையில் சருகுபுலி மீட்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பில் அருகிவரும் விலங்குகளில் ஒன்றான சருகுபுலியொன்று
விபத்திற்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதான வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனை மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள நிலையில் குறித்த சருகுபுலியின் உடல்
மீட்கப்பட்டுள்ளது.


சருகு புலியானது சதுப்பு நிலப்பகுதியில் அதிகளவில் வாழ்ந்துவரும் ஒரு விலங்காகும்.
இவ்வினம் அருகிவரும் நிலையில் இவ்வாறான விபத்துகளில் இறக்கும் நிலையும்
அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .