2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

புதிதாக 700 ஆசிரியர்கள் நியமனம்

Freelancer   / 2023 ஜூலை 25 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் புதிதாக  700  ஆசிரியர்களை  நியமனம்  செய்வதற்கு  கல்வி  அமைச்சர் சுசில்  பிரேமஜயந்த  கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில்  தொண்டமானுக்கு  அனுமதி  வழங்கியுள்ளார்.

கிழக்கு  மாகாண  ஆளுநர்  செந்தில்  தொண்டமான்,  கல்வி  அமைச்சர்  சுசில்  பிரேமஜயந்தவை   திங்கட்கிழமை  (24)  கல்வி  அமைச்சில்  சந்தித்து  கலந்துரையாடிய  போதே  இவ் அனுமதி  வழங்கப்பட்டிருப்பதாக ஆளுநரின்  ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக  நிலவும்  ஆசிரியர்  தட்டுப்பாட்டைக்  கருத்தில் கொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான்  மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம்  செய்வதற்கு  கல்வி அமைச்சர்   சுசில்  பிரேமஜயந்த  அனுமதி  வழங்கியுள்ளாதக ஊடகப் பிரிவு    தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X