2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வந்தாறுமூலையில் வாகன விபத்து; மூவர் படுகாயம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியின், வந்தாறுமூலை பகுதியில் நேற்று(08)  மாலை 5.15 மணியளவில் எதிர் எதிரே வேகமாகப் பயணித்த சிறியரக லொறியும்,பிக்கப் வண்டியொன்றும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்விபத்தில் இருவாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சேதமடைந்த வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .