2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீர் நிறப்பிய பலூன்களை எறிந்து சாதனை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


3 இலட்சத்து 50 ஆயிரம் நீர் நிறப்பிய பலூன்களை எறியும் போட்டியில் சுமார் 9 ஆயிரம் பேர் பங்குபற்றி உலக சாதனை படைத்த சம்பவமொன்று அமெரிக்காவின், ஸ்போகனில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேற்படி பகுதியில் ஒன்று கூடிய 9,000 பேர், இவ்வாறு 3 இலட்சத்து 50 ஆயிரம் நீர் நிறப்பிய பலூன்களை எறிந்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

சென்டிகி பல்கலைக்கழத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 8,500 பேர் ஒன்று கூடி 100,000 நீர் நிரப்பப்பட்ட பலூன் எறிந்து சாதனை படைத்தனர்.
இச்சாதனையை மேற்படி போட்டி முறிடியதுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பகுதிகளாக பிரிந்த குழுக்கள் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நீர் நிரப்பிய பலூன்களை எறிந்துகொண்டனர்.

பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்த இந்நிகழ்வானது ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதாக அமைந்திருந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .