A.P.Mathan / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தே.மு.தி.க) எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அ.தி.மு.க.வின் சிந்தனைத் தோட்டத்தில் பூத்த மலர்களில் ஒன்றான பன்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவராக இருந்து விஜயகாந்திற்கு வழி காட்டி வருகிறார். பன்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்தவர். ராஜீவ் காந்தி இந்திய பிரதமராகவும், எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த நேரத்தில் உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்காக முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் இந்த பன்ருட்டி ராமச்சந்திரன். இந்த இரட்டையர்களின் தலைமையில்தான் தே.மு.தி.க. இவ்வளவு காலமும் அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வாக்கு வங்குவதற்கு விஜயகாந்த் என்றால், வியூகத்திற்கு பன்ருட்டி ராமச்சந்திரன்- இதுதான் தே.மு.தி.க.வின் பொலிட்டிக்கல் அஜெண்டா.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago