2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய பயணத்துக்கு வித்திட்ட இந்தியா

Editorial   / 2022 மார்ச் 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என்பது இரகசியமான ஒன்றல்ல. அரசாங்கத்தின் வருவாய் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சிக்கலான நிலையை காட்டுகின்றன.
 
மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கடுமையான நெருக்கடியான காலகட்டத்தில் நட்பு நாடான இந்தியா அவசர உதவி மற்றும் கடன் உதவிகளை வழங்கி வருகிறது.

இது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடையாளப்படுத்துகிறது.இது அண்டை நாடுகளுக்கிடையேயான நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் உயர்ந்த புள்ளியாகும்.

இந்த தற்காலிக நிவாரணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்போது புதிதாக சிந்திக்க வேண்டும். வருவாயை உயர்த்தும் போது வெளிநாட்டு சொத்துக்களை ஒருங்கிணைப்பது அவசியம். இதுவரை வந்த வழியில் நடந்த தவறுகளை கண்டறிந்து திருத்த வேண்டும். இருப்புக்கான புதிய அணுகுமுறையில் நுழைவது ஆட்சியாளர்களின் பொறுப்பு.

இந்திய கடன் உதவி

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் என்பது உடனடியாக கிடைத்த கடன்.எனினும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, நான்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் இதில் முக்கிய அங்கமாகும்.

இரண்டாவது, எரிசக்தி மற்றும் பாதுகாப்பாகும். அதாவது எரிபொருள் இறக்குமதி செலவுகளை ஈடுசெய்யும் கடன்கள் திட்டம், மற்றும் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் விரைவான நவீனமயமாக்கல் ஆகியவை அடங்கும்.

மூன்றாவது மற்றும் நான்காவது, இலங்கைக்கு கொடுப்பனவு சமநிலையை தீர்ப்பதில் உதவுவதற்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பல்வேறு துறைகளில் இந்திய முதலீட்டை எளிதாக்குவதற்கும் பரிவர்த்தனை பரிமாற்றமும் உள்ளடங்கும்.

கடனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இராஜதந்திர உறவுகளின்படி, வட்டி விகிதம் மிகவும் குறைவு. மற்றும் இந்தக் கடனின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை நிதி அமைச்சகம் தீர்மானிக்கும்.

இந்திய-இலங்கை நிவாரணப் பொதியானது 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட பரந்த கட்டமைப்பிற்கு நீண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனி கடன் உள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு, இந்த கடன் தொகையை 750 மில்லியன் அமெரிக்க  டொலர்களாக உயர்த்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடன் நிவாரணம் பெரும் அனுகூலமாகும். ஆனால் அதன் பின்னணியை மறந்துவிடக் கூடாது.

அரசாங்கமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினை உள்ளது. இலங்கையில் பொருளாதார திறமையின்மை ஒரு பலவீனம்.

நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது ஆனால் இந்தியாவில் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கான கடன் கையிருப்பு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

தவறு எங்கே நடந்தது?

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், சூரிய ஒளி மின் உற்பத்திக்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக அறிவித்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சிக்காக இந்தியப் பிரதமர் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொகைக்கான ஒப்பந்தம் ஏன் இன்னும் கையெழுத்தாகவில்லை?

இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான ஏராளமான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உதவி அட்டைகள் அறிமுகம், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்பாடு, விமான நிலையங்களின் மேம்பாடு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவையும் உள்ளன.

பொருளாதார உலகமயமாக்கலுடன், சர்வதேச அளவில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சேதம் மிகசக்தி வாய்ந்தது.

2022 மற்றும் அதற்குப் பிறகு ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை புதிய மாதிரியில் கட்டமைக்க முயல்கின்றன.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தை உரிமையில் அதிக முதலீடு செய்யும் காலம் இது. இலங்கை போன்ற சிறிய நாடு வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடையாளத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

தங்களுக்கு என்ன வேலை செய்கிறது என்பதற்கான வரைபடத்தை உருவாக்க அவர்களுக்கு போதுமான ஞானம் தேவை.  இந்திய உதவி   மட்டுமின்றி அந்த கட்டமைப்பின் அடிப்படையிலும் விரிவான திட்டத்தை கொண்டு வருவது ஆட்சியாளர்களின் பொறுப்பு.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-2023ல் 7.8 சதவீதத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பரந்த மக்கள் தொகை, நடுத்தர வருமானம் மற்றும் அதற்கு மேல் வளரும் போது சந்தையின் தேவைகள் விரிவடைகின்றன.

இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இந்திய சந்தையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு விவசாயத் துறையில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளனர். இவை பற்றிய நமது ஆய்வும் இந்த இந்திய உதவியோடு தொடர வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .