2025 ஜூன் 30, திங்கட்கிழமை

14 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ஐயாயிரத்துக்கும் அதிகமானோரை பெப்ரல் அமைப்பு ஈடுபடுத்தவுள்ளதாக

அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளை ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 2 ஆயிரம் கண்காணிப்பார்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

கெபே அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் கணக்காணிப்பு பணிகளுக்காக 14 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X