2025 ஜூலை 12, சனிக்கிழமை

14 தொற்றாளர்களால் 7 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Nirosh   / 2021 மார்ச் 13 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ எம் கீத்)

திருகோணமலை நகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 14 பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 7 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்துக்குட்பட்ட திருகோணமலை நகரில் 129 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகளிலேயே அங்குள்ள கடற்படை முகாமில் பணியாற்றும் நபரொருவர் உள்ளிட்ட  14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்றாளர்கள் பணிப்புரியும் வர்த்தக நிலையங்கள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதோடு, அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .