2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3 இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று

Freelancer   / 2021 ஜூலை 28 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நாட்டில் மேலும்  1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,272  ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,499 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  271,855 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,842 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

நேற்றைய தினம் வரை  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,195 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .