2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

Freelancer   / 2021 ஜூலை 14 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

337,445 பேருக்கு நேற்றையதினம் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது நாட்டில், அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நாளாகும் என அப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில் தெரியவருகிறது. 

சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 289,122 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 32,385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்புட்ணிக் 5 தடுப்பூசியின் முதலாவது டோஸ் 15,202 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 700 பேருக்கும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 36 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X