J.A. George / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து மேலும் 471 பேர் இன்று(11) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இருந்து 100 பேர், கட்டாரில் இருந்து 81 பேர் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 290 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேலும் 40துக்கும் அதிகமானவர்கள் இன்று நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
மாலைத்தீவில் இருந்து 36 பேரும், பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஜேர்மனியில் இருந்து சிலரும் வரவுள்ளனர்.
இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5961 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .