Freelancer / 2021 ஜூலை 12 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 275,458 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1,804 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி 246,241 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றினால் 31 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் 16 ஆண்களும் 15 பெண்களும் உள்ளடங்குகி்ன்றனர்
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,533 ஆக அதிகரித்துள்ளது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026