Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸார் அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய, 0112587229 மற்றும் 01122454576 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, பொதுமக்கள் அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும்.
இதேவேளை, விசேட பயிற்சிப்பெற்ற உயிர்காப்பு மற்றும் அனர்த்த உதவி பொலிஸ் அதிகாரிகள் 150 பேர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
50 பேர் கொண்டு மூன்று குழுவினராக இவர்கள் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனர்த்த உதவிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் கடற்பிரிவுக்கு சொந்தமான 50 படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago