Princiya Dixci / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சேவை தொடர்பாக, அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக, தான் கட்சியில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக, கட்டானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினரும் ரோஸ் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கட்டானையில் அமைந்துள்ள அவரது பிரதான கட்சி காரியாலயத்தில், நேற்று (19) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த அரசாங்கத்தின் காலத்தில், கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா சாரதிகள் சங்கம் சுயாதீனமாக செயற்பட முடியாமல், அன்று பிரதியமைச்சராக இருந்த சரத்குமார குணரத்ன, பல்வேறு தலையீடுகளை செய்தார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அதனைச் செய்கிறார்.
“டென்டர் மூலமாகப் பெறப்பட்ட சட்ட ரீதியான வரையறையுடன், விமான நிலைய 101ஆம் இலக்க கவுன்டர், மீண்டும் விமான நிலைய சுற்றுலா சாரதிகள் சங்கத்துக்குக் கிடைத்துள்ளது. சங்கத்தில் உள்ள 135 சாரதிகளுடன் ஒப்பந்தம் செய்து வேலைகளைத் தொடர்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒப்பந்த வேலைகளைச் செய்வதற்காக, சுற்றுலா அனுமதிப் பத்திரம் அவசியமாகும்.
“அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அதிகாரத்தின் கீழ் உள்ள சுற்றுலா தொடர்பான அலுவலகத்தில் அதனை பெறுவதற்காக சென்றபோது, அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்துபேரை, விமான நிலைய சுற்றுலா சாரதிகள் சங்கத்துக்குள் உள்வாங்குமாறும், அவர்களுக்கு சுற்றுலா அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்து விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறும், அமைச்சரினால் வற்புறுத்தப்பட்டது.
“இதன் காரணமாக இந்த விடயம் நிறுத்தப்பட்டு, 135 சாரதிகள், தொழில் செய்ய முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
“நல்லாட்சியின் கீழ், நீதியாக நடக்க வேண்டுமென்று நாங்கள் முயற்சி செய்யும் போது, எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வற்புறுத்துவதை, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“இதுதொடர்பாக நான், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago