2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அரசியல் வாழ்வை நாசம் செய்த சேதன உரம் '

Freelancer   / 2022 ஜனவரி 12 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தேசிய விவசாயிகள் அமைப்புக்களுடன் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

பெரும்போக இயற்கை விவசாய வேலைத்திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவையெனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சேதன பயிர்ச்செய்கை திட்டத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் அளுத்கமகே குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .