2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ஆந்திராவில் கார் - லொறி மோதி விபத்து: 7 பேர் பலி

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் கார் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்​திர மாநிலம், நெல்​லூர் குர்​ரம்​வாரி வீதியை சேர்ந்த பால வெங்​கைய்யா (வயது 40) என்​பவரின் குடும்​பத்​தினர் கடப்பா மாவட்​டம், ஆத்​மகூர் எனும் ஊரில் உறவினர் ஒரு​வரின் குடும்​பத்​தாரை துக்​கம் விசா​ரிக்க காரில் நேற்று (17) காலை புறப்​பட்​டனர்.

அப்​போது, நெல்​லூர் மாவட்​டம், சங்​கம் அருகே வெரமன் எனும் எனும் இடத்​தில், மும்பை தேசிய நெடுஞ்​சாலை​யில், வீதியின் எதிரே அதிவேக​மாக தவறான பாதை​யில் வந்த டிப்​பர் லொறி, இவர்​களின் கார் மீது வேக​மாக மோதி​யது. இதில் கார் டிப்​பர் லொறி​யின் அடி​யில் சிக்கி கொண்​டது.

இந்த கோர விபத்​தில், காரில் பயணம் செய்த பால வெங்​கைய்யா (வயது 40), இவரது மனைவி ராதா (வயது 38), இவரின் சகோ​தரர் நி​வாசுலு (வயது 42), நி​வாசுலு​வின் மனைவி லட்​சுமி (வயது 40), உறவினர் ஷேரம்மா (வயது 42), ஓட்​டுனர் தெல்ல குண்ட்ல நி​வாசுலு (வயது 48) மற்​றும் 4 வயது சிறு​வன் ஆகியோர் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 

டிப்​பர் லொறி ஓட்​டுனரின் அலட்​சி​யமே இந்த விபத்​துக்கு காரணம் என முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X