2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இலங்கை வங்கியின் 23 கிளைகளுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலையில், இன்றைய தினம் இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் விசேட அறிவிப்பையும் இலங்கை வங்கி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் ஹொரன, இரத்மலான,குருகொட, இங்கிரிய, கொத்தட்டுவ மற்றும் வெலிவேரியஆகிய கிளைகளும் மத்திய மாகாணத்தில் கண்டி பொது வைத்தியசாலை கிளை மற்றும் திகன, வடமத்திய மாகாணத்தில் ரம்பேவ, சப்ரகமுவையில் கித்துல்கல ஆகிய கிளைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமேல் மாகாணத்தில் வாரியபொல மற்றும் நிக்கவரெட்டிய, தெற்கில் காலி,இமதுவ, யக்கலமுல்ல, பெலியத்த,ஹம்பாந்தோட்ட, மித்தெனிய ஆகிய கிளைகளும் ஊவாவில் புத்தல, எத்தலிவெவ, ஹப்புதளை,மொனராகல மற்றும்பதுளை பிரதேச கடன் மத்திய நிலையமும் இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா ​தொற்றால் எதிர்வரும் நாள்களில் தமது வங்கி கிளைகளைத் திறக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .